தலைவர் பதவியிலிருந்து தூக்கப்படும் கே.எஸ் அழகிரி! அடுத்த தலைவர் இவர் தான்- கராத்தே தியாகராஜன் அதிரடி

 

தலைவர் பதவியிலிருந்து தூக்கப்படும் கே.எஸ் அழகிரி! அடுத்த தலைவர் இவர் தான்- கராத்தே தியாகராஜன் அதிரடி

கொரோனா காலம் என்பதால் ரஜினி பொறுத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்த நாளையொட்டி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 15 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள கே எஸ் அழகிரி விரைவில் மாற்றப்படுவார். கார்த்திக் சிதம்பரம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்.

தலைவர் பதவியிலிருந்து தூக்கப்படும் கே.எஸ் அழகிரி! அடுத்த தலைவர் இவர் தான்- கராத்தே தியாகராஜன் அதிரடி

சமீபத்தில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸுக்கு எங்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சோனியா காந்தியின் படமும் ஸ்டாம்ப் சைஸில் போடப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் படம் பெரிய அளவில் போடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக 2017 ஆம் ஆண்டு என்ன கூறினாரோ அந்த இடத்திலேயே நிற்கிறார். அதைத் தாண்டி அவர் நகரவில்லை. இது கொரோனா காலம் என்பதால் ரஜினி பொறுத்துக்கொண்டு இருக்கிறார். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்” எனக் கூறினார்.