சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு தொலைபேசியில் ரஜினிகாந்த் இரங்கல்!

 

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு தொலைபேசியில் ரஜினிகாந்த் இரங்கல்!

சாத்தான்குளத்தில் விசாரணை கைதிகளான தந்தை – மகன் போலீசாரால் தாக்கப்பட்டதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்தக் சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாத்தான்குளம் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமில்லாது திரையுலகை சேர்ந்த பலரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கிடைக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு தொலைபேசியில் ரஜினிகாந்த் இரங்கல்!

ஆனால் எதிர்கால அரசியல்வாதியாகவும், தற்கால நடிகராகவும் பார்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இந்த விவகாரம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ரஜினியை சமூகவலைதள வாசிகள் வழக்கம் போல் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு தொலைபேசியில் ரஜினிகாந்த் இரங்கல்!

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் அபிமானியுமான காரத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ” சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினி ஜெயராஜ் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு தொலைபேசியில் ரஜினிகாந்த் இரங்கல்!

இதை கண்ட சிலர், ‘ உண்மையில் மனம் வருந்தி பேசியிருந்தால் சரி, அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துக்காக ஐந்து நாள் கழித்து பேசியிருந்தால் இதை விட கேவலம் ஒன்றும் இல்லை’ என்றும் ‘இத அந்த மனுஷன் சொல்லமாட்டாரோ..?? ட்விட்டர்ல அவரும் தான இருக்காரு…மத்ததுக்கெல்லாம் ட்வீட் போட்றவரு இதுக்கு போய் மாட்டாரோ…?’ என்றும் கூறி வருகின்றனர். இதற்கு ரஜினி ரசிகர்களோ பதிலடி கொடுத்து வருகின்றனர்.