புதுச்சேரி விடுதலை நாள்; தேசிய கொடி ஏற்றிய அமைச்சர் கமலகண்ணன்

 

புதுச்சேரி விடுதலை நாள்; தேசிய கொடி ஏற்றிய அமைச்சர் கமலகண்ணன்

காரைக்கால்

புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி, காரைக்காலில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து,
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

புதுச்சேரி விடுதலை நாள்; தேசிய கொடி ஏற்றிய அமைச்சர் கமலகண்ணன்

புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் பிராந்தியங்கள் இந்தியாவுடன் இணைந்த நவம்பர் 1ஆம் தேதி, புதுச்சேரி விடுதலை நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுச்சேரி விடுதலை நாள்; தேசிய கொடி ஏற்றிய அமைச்சர் கமலகண்ணன்

இதனையொட்டி, காரைக்காலில் இன்று நடைபெற்ற விடுதலை தின விழாவில், அம்மாநில வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

புதுச்சேரி விடுதலை நாள்; தேசிய கொடி ஏற்றிய அமைச்சர் கமலகண்ணன்

கொரோனா காரணமாக இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, முதுநிலை எஸ்.பி நிஹாரிகா பட், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, விழாவை கண்டுகளித்தனர்.