காரைக்கால் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

காரைக்கால் ஆட்சியருக்கு  கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாமானியர்கள் தவிர பொதுபணியில் ஈடுப்பட்டு வருவோருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

காரைக்கால் ஆட்சியருக்கு  கொரோனா தொற்று உறுதி!

அந்த வகையில் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், காவலர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் ஆட்சியருக்கு  கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் புதுச்சேரி காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.