தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் இணைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் இணைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

வாதிரியார் சமூகத்தினரை, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினருடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கண்ணன்பதி கிராமத்தை சேர்ந்த வாதிரியார் சமூகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, தனித்த பண்பாட்டையும், தாய்வழி உறவு முறையையும் கொண்ட நெசவாளர்களாகிய வாதிரியார் சமூகத்தை, அனுமதியின்றி தேவந்திர குல வேளாளர் இனத்தில் இணைக்க கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.