குழித்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு
Nov 1, 2020, 10:45 IST1604207708000
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த், திடீர் ஆய்வுமேற்கொண்டார். கன்னியாகுமரி
மாவட்டத்தின் 51-வது ஆட்சித்தலைவராக, நிதித்துறை இணை செயலாளராக இருந்த அரவிந்த் கடந்த 29ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து,
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நீர்நிலைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று குழித்துறை
வட்டாட்சியர் அலுவலம் சென்ற அவர், அரசு அலுவலர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்து, அங்கிருந்த கோப்புகளையும் பார்வையிட்டார். இதனால் குழித்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.