கன்னியாகுமரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா: புதுக்கோட்டையில் தொற்று 2 ஆயிரத்தை கடந்தது!

 

கன்னியாகுமரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா: புதுக்கோட்டையில் தொற்று 2 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,,978 ஆக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா: புதுக்கோட்டையில் தொற்று 2 ஆயிரத்தை கடந்தது!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 98,767பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா: புதுக்கோட்டையில் தொற்று 2 ஆயிரத்தை கடந்தது!

இந்நிலையில் கன்னியாகுமரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,801 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது. அதேபோல் புதுக்கோட்டையில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,164 ஆக அதிகரித்துள்ளது.