கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கொரோனா உறுதி!
Jul 25, 2020, 08:07 IST1595644667000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,469 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 ஆயிரத்தை நெருங்குகிறது.