எஸ்.பி.பி உடல்நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும்: கனிமொழி
50 ஆண்டு கால திரையுலக இசை பயணம் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசம் கட்டிபோட்டு வைத்திருப்பவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவர் இசை உலகின் ஓர் சகாப்தம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவர் கொரோனா என்ற அரக்கன் பிடியில் சிக்கி போராடி வருகிறார். அவர் மீண்டும் மீண்டு வர வேண்டும் என்பதே கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் ஒரே பிரார்த்தனையாக உள்ளது. இதனிடையே அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இலட்சக்கணக்கான பாடல்களின் வழியாக நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட எஸ்பிபி அவர்கள் இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
எந்த குரலை கேட்காது ஒருநாளைக்கூட தாண்டிப்போவது சாத்தியமில்லையோ, எந்த குரல் மக்களின் 1/2#SPBalasubramaniam pic.twitter.com/0yt5ZGZIpa
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 15, 2020
இந்நிலையில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “இலட்சக்கணக்கான பாடல்களின் வழியாக நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட எஸ்பிபி அவர்கள் இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. எந்த குரலை கேட்காது ஒருநாளைக்கூட தாண்டிப்போவது சாத்தியமில்லையோ, எந்த குரல் மக்களின் மகிழ்ச்சியையும் வலிகளையும் அன்றாடம் பகிர்ந்துகொண்டதோ, எந்த குரல் தன் பாடலின் வழி ஒரு நிகழ்கலையையே நடத்திடுமோ, அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உடல்நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.