உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி

 

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி

இதில் உதயநிதி ஸ்டாலின் அபார வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராக உருவெடுத்துள்ளார். முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட அவர் சுமார் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, “சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். முதல் முறையாக பொறுப்பேற்கும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்.
உதயநிதி ஸ்டாலின்” என தெரிவித்துள்ளார்.