இதுதான் பாஜகவின் உண்மைமுகம்! எச்சரித்த கனிமொழி எம்பி

 

இதுதான் பாஜகவின் உண்மைமுகம்! எச்சரித்த கனிமொழி எம்பி

பெகாசஸ் பிரச்சினையை விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய பாஜக அரசு அதை பாராளுமன்றத்துக்குள் விவாதிக்கவே தயாராக இல்லை என எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதான் பாஜகவின் உண்மைமுகம்! எச்சரித்த கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “நாடாளுமன்ற பெகாசஸ் என்பது மிகப்பெரிய பிரச்சினை. இதனை பொதுவெளியில் விவாதிக்க தயாராக இருக்கிறோம்
என்று சொல்லக்கூடிய பாஜக அரசு அதை நாடாளுமன்றத்துக்குள் விவாதிக்கவே தயாராக இல்லை.இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். ஆனல் அதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. வெளியே சொல்வது ஒன்று, உள்ளே திட்டமிடுவது ஒன்றும். இதுவே பாஜகவின் நிலைப்பாடு. பாஜக ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு நிலைப்பாடு எடுப்பதால் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதே பிரதமர், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகள் குறித்து பேசினார். ஆனால், இன்று ஒவ்வொரு மசோதாவிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதுதான் அவர்களின் உண்மையான முகம். கொரோனா விவகாரம், வேளாண் சட்டம், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறியும், பாஜக அதற்கு வாய்ப்பு தரவில்லை. பாஜகவினர் எதிர்க்கட்சியினருடன் உரையாட வாய்ப்பில்லை” எனக் கூறினார்.