“முதல்வருக்கு ஒரு பட்டியல் காப்பி அனுப்புங்க பா”… கனிமொழி எம்பி

 

“முதல்வருக்கு ஒரு பட்டியல் காப்பி அனுப்புங்க பா”… கனிமொழி எம்பி

மக்களுக்கு திமுக செய்த நல்ல திட்டங்களை பற்றிய பட்டியல் வேண்டுமா? முதல்வருக்கு ஒரு காப்பி அனுப்ப தயராக உள்ளோம் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டபட்டுள்ளவர்கள் பெரும்பலானவர்கள் அதிமுவை சேர்ந்தவர்கள். சில தினங்களுக்கு முன்பு கூட அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதிமுக அமைச்சர்களுடன் பணியாற்றிய புகைப்படங்கள் கூட வெளியாகி உள்ளது. குற்றாவளிகளை காப்பாற்றுவதற்கு தான் அதிமுக அக்கறை காட்டுகிறது. தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க அக்கறை காட்டவில்லை என்பது தான் உண்மை. திமுக தொடர் போராட்டத்தின் காரணமாக பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்டுகள் கழித்து தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை வேகமாக நடைபெற வேண்டும் என்பது தான் திமுகவின் கோரிக்கை என்றார்

“முதல்வருக்கு ஒரு பட்டியல் காப்பி அனுப்புங்க பா”… கனிமொழி எம்பி

10 ஆண்டுகளாக ஆட்சியில் அதிமுக மக்களுக்கு என்ன செய்ததது என்று முதலில் பதில் கூற வேண்டும். அதன் பின்னர் திமுக ஆட்சியில் செய்ததது பற்றி நாங்கள் கூறுகிறோர். திமுக மக்களுக்கு செய்ததது பற்றி கடந்த தேர்தல் அறிக்கையில் உள்ளது. முதல்வர் வேண்டும் என்றால் அவருக்கு ஒரு காப்பி அனுப்பவும் தயாராக உள்ளோம். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது முதல்வர் கூறும் எந்த ஊழல் வழக்குகளும் நிரூபிக்கப்படவில்லை, திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டவை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்காப்பீட்டு திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும், கிராம மக்கள் சபையில் பெற்ற மனுக்களுக்கு தீர்வு காணப்படும், அதிமுக 10 வருடமாக செய்ய தவறியதை நாங்கள் செய்வோம்” எனக் கூறினார்.