காவல்துறையில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் சீண்டல்கள்- கனிமொழி காட்டம்

 

காவல்துறையில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் சீண்டல்கள்- கனிமொழி காட்டம்

அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என திமுக மகளிரணி செயலாளர் எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸுக்கு எதிராக ஒரு பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. போலீசுக்கே பாதுகாப்பு தர முடியாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு தரமுடியும் என்றும், தமிழக காவல்துறையில் செல்வாக்கு மிக்க உயரதிகாரியான ராஜேஷ் தாஸுக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கொடுத்த அந்த பெண் அதிகாரியை ஐ.ஜி.,அந்தஸ்தில் உள்ள எம். ஜெயராம் என்ற அதிகாரி வற்புறுத்தி புகாரை வாபஸ் பெற வைக்க முயற்சிப்பதாக காவல்துறையிலிருந்தே தகவல் கசிந்ததாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் சீண்டல்கள்- கனிமொழி காட்டம்

பாலியல் தொந்தரவு புகாரை அந்த பெண் அதிகாரி திரும்ப பெறவில்லை என்றால், அவரது எதிர்காலத்தையே சிதைத்துவிடுவதாக ராஜேஷ்தாஸ் மிரட்டி வருவதாகவும் காவல்துறையினரிடையே ஒரு தகவல் பரவி வருவதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றுவிடுவார் என்றும் அதனால், இந்த விவகாரத்தில் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்க தேவையிருக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ராஜேஷ்தாஸ் முறையிட்டுள்ளதாகவும், அதனால், பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகும் பெண்கள் அளிக்கும் புகாரின் மீது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டிய விசாரணைக் குழுவையே இதுவரை அமைக்காமல், முதல்வர் பழனிசாமி காலம் தாழ்த்தி வருவதாகவும் கனிமொழி காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காவல்துறையில் பெண் அதிகாரிக்கு ஏற்பட்டிருக்கும் இதேபோன்ற நிலைமை, அதே துறையில் கீழ்நிலையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால், அவர்களின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை என்றும் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு பெண் அதிகாரி, தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள எஸ்.முருகனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் அளித்தார் என்றும் ஆனால், அந்த புகாரின் பேரிலும் மேல் நடடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கனிமொழி அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.