சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி.. வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி!

 

சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி.. வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி கனிமொழி இன்று காலை பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி.. வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி!

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, தமிழக மக்களுக்கு எதிராக பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு வரவேற்றது இந்த அதிமுக அரசு. டெல்லியில் தமிழகத்தை அடகு வைத்து விட்டது. 10 ஆண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்த அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டார்கள். திமுக வந்தவுடன் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி.. வறுத்தெடுத்த கனிமொழி எம்.பி!

தொடர்ந்து பேசிய அவர், திமுகவை பார்த்து பச்சோந்தி என சொல்கிறார். அவர் தான் தினமும் ஒவ்வொரு வண்ணத்தில் மாறிக் கொண்டிருக்கிறார். தமிழக ஆட்சியை டெல்லி அரசு தான் நடத்துகிறது. தமிழ்நாட்டின் ஆட்சி இங்கேயே நடக்கவேண்டும் என்றால் திமுக அரியணை ஏறவேண்டும் என்று கூறினார்.

மேலும், தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கிய துரோகம் செய்தவர் பழனிசாமி என்றும் பெண் போலீஸ் அதிகாரிக்கு பாதுகாப்பில்லாத மோசமான ஆட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார்.