“2015 பெரு வெள்ளத்தில் பாடம் கற்காத அதிமுக அரசு” – கனிமொழி பேட்டி

 

“2015 பெரு வெள்ளத்தில் பாடம் கற்காத அதிமுக அரசு” – கனிமொழி பேட்டி

கோவை

சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து, அதிமுக அரசு பாடம் கற்றுக்கொள்ள வில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். சேலத்தில் நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்ற முறை சென்னையில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் அதன் பிறகும் இந்த அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

“2015 பெரு வெள்ளத்தில் பாடம் கற்காத அதிமுக அரசு” – கனிமொழி பேட்டி

மேலும், தண்ணீர் வரும் வழித்தடங்கள் சரிசெய்யப்பட வில்லை என்று குற்றம்சாட்டிய கனிமொழி, இந்த முறை சென்னையில் பாதிப்பு குறைந்ததற்கு, புயல் வலுவிழந்ததே காரணம் என தெரிவித்தார். எனினும், மறுபடியும் வெள்ளமோ, புயலோ ஏற்பட்டால், பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக தெரிவித்த கனிமொழி,
இன்றைய ஆட்சி சுற்றுபுற சூழலையோ, நீர்நிலைகளை பாதுகாக்க கூடிய மனநிலையில் இல்லை எனவும் தெரிவித்தார்.