மம்தா பானர்ஜியை சந்தித்த கனிமொழி!

 

மம்தா பானர்ஜியை சந்தித்த கனிமொழி!

டெல்லியில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து பேசினார்.

மம்தா பானர்ஜியை சந்தித்த கனிமொழி!

மூன்று நாள் பயணமாக டெல்லி வந்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், இன்று திமுக மக்களவை எம்.பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் தங்கியுள்ள மம்தா பானர்ஜி-யை சந்தித்து 30 நிமிடங்கள் பேசினார்.

இந்த சந்திப்பின் போது மேற்கவங்க மாநிலத்தின் முதலமைச்சராக 3வது முறையாக பொறுப்பேற்றதற்கு மம்தாவுக்கு கனிமொழி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ”மரியாதை நியமித்தமாகவே மம்தா பானர்ஜியை சந்தித்தேன். அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் சந்தித்ததால் வாழ்த்துக்களை தெரிவித்தேன்” எனக் கூறினார்.