போதை கும்பலுடன் எனக்கு தொடர்பா?.. நிரூபியுங்க.. மும்பையை விட்டு வெளியேறுகிறேன்.. சவால் விடும் கங்கனா

 

போதை கும்பலுடன் எனக்கு தொடர்பா?.. நிரூபியுங்க.. மும்பையை விட்டு வெளியேறுகிறேன்.. சவால் விடும் கங்கனா

போதை கும்பலுடன் எனக்கு தொடர்பு இருக்கு என்று நிரூபித்தால் மும்பையை விட்டு வெளியேறுகிறேன் என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சருக்கு நடிகை கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை மகாராஷ்டிராவின் மொத்த அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. ஆனால் அதற்கு எல்லாம் அசராமல் யாருடைய ஆதரவும இல்லாமல் கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்து வருகிறார். போதை பொருள் வழக்கு தொடர்பாக கங்கனா ரனாவத்தை விசாரிக்க மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார். அதற்கும் கங்கனா ரனாவத் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.

போதை கும்பலுடன் எனக்கு தொடர்பா?.. நிரூபியுங்க.. மும்பையை விட்டு வெளியேறுகிறேன்.. சவால் விடும் கங்கனா
கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத் தனது டிவிட்டரில், என்னை பரிசோதனை செய்ய வற்புறுத்துவதில் மும்பை போலீஸ் மற்றும் அனில்தேஷ்முக் ஆகியோரை விட நான்தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தயவு செய்து எனக்கு போதைபொருள் பரிசோதனைகள் மேற்கொள்ளுங்கள். என்னுடைய தொலைபேசி உரையாடல் குறித்து விசாரணை நடத்துங்கள். போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் எனக்கு ஏதேனும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தால் நான் எனது தவறை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறேன். மும்பையை விட்டு வெளியேறுகிறேன் எப்போதும், உங்களை சந்திக்க எதிர்பார்க்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.

போதை கும்பலுடன் எனக்கு தொடர்பா?.. நிரூபியுங்க.. மும்பையை விட்டு வெளியேறுகிறேன்.. சவால் விடும் கங்கனா
அனில் தேஷ்முக்

பாலிவுட் நடிகர் அத்யாயன் சுமன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நடிகை கங்கனா ரனாவத் போதைபொருட்களை பயன்படுத்துவதாகவும், தன்னையும் மருந்துகளை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், அத்யாயன் சுமன் பேட்டி அடிப்படையில் கங்கனா ரனாவத் போதைபொருள் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்.