உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றியவர் ஜெயலலிதா- கங்கனா ரனாவத்

 

உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றியவர் ஜெயலலிதா- கங்கனா ரனாவத்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவரும் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

Image

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கிவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று தலைவி படத்தில் வரும் சில காட்சிகள் அடங்கிய புகைப்படங்களையும், ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய புகைப்படத்தையும் கங்கனா ரனாவத் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/KanganaTeam/status/1335185724040044544

தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ள நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன். பெண்மையைப் போற்றுவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.