“கொரோனாலாம் எனக்கு ஜூஜூபி” – தொற்று ஏற்பட்டும் அடங்காத கங்கனா ரணாவத்!

 

“கொரோனாலாம் எனக்கு ஜூஜூபி” – தொற்று ஏற்பட்டும் அடங்காத கங்கனா ரணாவத்!

கங்கனா ரணாவத்தை திரைப்பட நாயகி என்று சொல்வதைக் காட்டிலும் சர்ச்சைகளின் நாயகி என்று சொல்வதே சாலச் சிறந்தது. அந்தளவிற்கு தனது பிற்போக்குத்தனமான கருத்துகளால் நெட்டிசன்களிடம் வாங்கி கெட்டி கொண்டார். தொடர்ந்து போலிச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்பி வந்த அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அங்கே சென்றும் அதே வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“கொரோனாலாம் எனக்கு ஜூஜூபி” – தொற்று ஏற்பட்டும் அடங்காத கங்கனா ரணாவத்!

இச்சூழலில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாகப் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு உடல் சோர்வாகவும், கண்களில் எரிச்சலும் இருந்தது. இதனால் நேற்று பரிசோதனை செய்து கொண்டேன். இன்று எனக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த கிருமி என் உடலில் கொண்டாட்டமாக இருந்து வருவது எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை.

https://www.instagram.com/p/COmVsjTBQ9e/

இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால் அதை நான் அழிப்பேன். மக்களே எக்காரணம் கொண்டும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியை அளிக்காதீர்கள். நீங்கள் பயந்தால் அது உங்களை மேலும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கொரோனா கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களைப் பயமுறுத்திவருகிறது. ஹர ஹர மஹாதேவ்” என்று குறிப்பிட்டுள்ளார்.