விசாரணைக்கு வரும்படி 2வது முறையாக சம்மன் அனுப்பிய மும்பை போலீசார்.. நான் ரொம்ப பிசி என்ற கங்கனா

 

விசாரணைக்கு வரும்படி 2வது முறையாக சம்மன் அனுப்பிய மும்பை போலீசார்.. நான் ரொம்ப பிசி என்ற கங்கனா

மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் வரும்படி மும்பை போலீசார் 2வது முறையாக சம்மன் அனுப்பிய பிறகும், பிசியாக இருப்பதால் வர முடியாது என்று நடிகை கங்கனா ரனாவுத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவுத் எந்தவித தயக்கமும், பயமும் இல்லாமல் தன் மனதில் வெளிப்படையாக சொல்பவர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான விசாரணையில் மும்பை போலீசை வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து சிவ சேனாவின் சஞ்சய் ரவுத், முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கங்கனாவை சாடினர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் அவர்களுக்கு கங்கனா பதிலடி கொடுத்தார்.

விசாரணைக்கு வரும்படி 2வது முறையாக சம்மன் அனுப்பிய மும்பை போலீசார்.. நான் ரொம்ப பிசி என்ற கங்கனா
கங்கனா ரனாவுத்

இதற்கிடையே கங்கனா ரனாவுத் மற்றும் அவரது தங்கை ரங்கோலி சாண்டல் மீது மும்பையில் பல எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கு தொடர்பாக மும்பை காவல் நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிக்கும்படி கங்கனாவுக்கு போலீசார் அண்மையில் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

விசாரணைக்கு வரும்படி 2வது முறையாக சம்மன் அனுப்பிய மும்பை போலீசார்.. நான் ரொம்ப பிசி என்ற கங்கனா
மும்பை போலீஸ்

இந்த சூழ்நிலையில் மும்பை போலீசார் நாளை காவல் நிலையத்துக்கு வரும்படி கங்கனா ரனாவுத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பினர். ஆனால் தனது சகோதரின் கல்யாண ஏற்பாடுகளில் பிசியாக இருப்பதால் வர முடியாது. நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு வருவதாக கங்கனா ரனாவுத் தெரிவித்தார்.