`மனைவிக்கு டெலிவரி நேரம்; இ-பாஸ் கிடைக்கவில்லை!’- தனியார் ஊழியர் எடுத்த விபரீதம்

 

`மனைவிக்கு டெலிவரி நேரம்; இ-பாஸ் கிடைக்கவில்லை!’- தனியார் ஊழியர் எடுத்த விபரீதம்

மனைவியின் டெலிவரிக்கு காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்ல இ-பாஸ் கிடைக்காத சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`மனைவிக்கு டெலிவரி நேரம்; இ-பாஸ் கிடைக்கவில்லை!’- தனியார் ஊழியர் எடுத்த விபரீதம்

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷவரன் (28). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ரோஜாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பிறகு ரோஜாவும் விக்கியும் காஞ்சிபுரத்தில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் ரோஜா கர்ப்பமடைந்தார். இதனால் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் ரோஜா. கொரோனா ஊரடங்கு காரணமாக விக்கியால், மனைவியைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தினங்களில் ரோஜாவுக்கு குழந்தைப் பிறக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனால் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்ட ரோஜா, “டெலிவரி நேரத்தில் நீங்களும் என் கூட இருந்தால் தைரியமாக இருக்கும்” என கூறியுள்ளார். அப்போது விக்கி, கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு செல்ல இ-பாஸிக்கு விக்கி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் இ-பாஸ் கிடைக்கவில்லை. இதனால் மனைவியைச் சந்திக்க முடியாமல் மனவேதனையில் இருந்த விக்கி, இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்லி புலம்பியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு விக்கி தற்கொலை செய்து கொண்டார்.

`மனைவிக்கு டெலிவரி நேரம்; இ-பாஸ் கிடைக்கவில்லை!’- தனியார் ஊழியர் எடுத்த விபரீதம்

இதனிடையே, விக்கியைச் சந்திக்க அவரது நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது விக்கி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சிவ காஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், சம்பவ இடத்துக்கு வந்து விக்கியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்கி தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

டெலிவரி நேரத்தில் மனைவியுடன் இருக்க இ-பாஸ் கிடைக்காத நிலையிலும் குழந்தையை பார்க்க முடியாத நிலையிலும் வேதனையில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.