காஞ்சிபுரத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி உயிரிழப்பு!

 

காஞ்சிபுரத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி உயிரிழப்பு!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கொரோனாவில் இருந்த மீண்ட தம்பதியினர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் ஏகம்பன் (72). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மனைவி அண்ணபூரணி(68). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், இருவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி உயிரிழப்பு!

இந்த நிலையில், தம்பதியினர் இருவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தொற்று குணமடைந்ததை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய அவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து அவர்களது மகன்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், மகன்கள் வந்து பார்த்தபோது, தம்பதியினர் இருவரும் வீட்டிற்குள் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.