பிற மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா: ஒரேநாளில் காஞ்சிபுரத்தில் 432 பேருக்கு தொற்று உறுதி!
Jul 25, 2020, 14:55 IST1595669125000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,793 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,818 ஆகவுள்ள நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,891 ஆக உள்ளது. மேலும் இங்கு இதுவரை கொரோனாவால் 84 பேர் பலியாகியுள்ளனர்.