காஞ்சிபுரத்தில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று! விருது நகரிலும் கொரோனா பாதிப்பு உயர்கிறது!
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,,978 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 98,767பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் மேலும் 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,097 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்று 9 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,541ஆக உயர்ந்துள்ளது.