காஞ்சிபுரத்தில் 9 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா : விருதுநகரில் மேலும் 237 பேருக்கு தொற்று உறுதி!

 

காஞ்சிபுரத்தில் 9 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா : விருதுநகரில் மேலும் 237 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,879 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 9 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா : விருதுநகரில் மேலும் 237 பேருக்கு தொற்று உறுதி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 877 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 9 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா : விருதுநகரில் மேலும் 237 பேருக்கு தொற்று உறுதி!

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,747 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல விருதுநகரில்  மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,388 ஆக அதிகரித்துள்ளது.