ஏலம்போட்டு தமிழ்நாட்டை விற்போருக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது- கமல்ஹாசன்

 

ஏலம்போட்டு தமிழ்நாட்டை விற்போருக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது- கமல்ஹாசன்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பால் மில்க்ரோம், ராபர்ட் பி. வில்சன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலக்கோட்பாடின் ஏல மேம்பாடு மற்றும் ஏலத்திற்கான மாறுபட்ட வடிவமைப்பை உருவாக்கியதற்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ஏலம்போட்டு தமிழ்நாட்டை விற்போருக்கும் விரைவில் பரிசு காத்திருக்கிறது- கமல்ஹாசன்

வழக்கமான முறையில் ஏலம் விட முடியாத ரேடியோ, மின் காந்த அலைகள் போன்றவற்றை விற்பதற்கு இவர்கள் இருவரின் ஆராய்ச்சி பயன்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது. நாளை நமதே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.