மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் டாஸ்மாக்குகள் திறக்கப்படுகிறதா?- கமல்ஹாசன்

 

மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் டாஸ்மாக்குகள் திறக்கப்படுகிறதா?- கமல்ஹாசன்

கொரோனவால் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா அதிகமாக சென்னையில் பரவியதால், அங்கு மட்டும் டாஸ்மாக் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதால், மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக்குகளை நாளை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே தர வேண்டும் என்றும் டாஸ்மாக்கில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் 3 மீட்டர் இடைவெளியுடன் நிற்கும் வகையில் 50 வட்டங்கள் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.