போராட்டம் தொடரும்- கமல்ஹாசன்

 

போராட்டம் தொடரும்- கமல்ஹாசன்

நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 70 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த பெட்ரோல் தற்போது 100 ரூபாயை எட்டியிருப்பது சாமானிய மக்களுக்கும் கடும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர், இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Image

இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது.

மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து இன்று தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டம் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.