சாதிய வன்மமாக மாறி இரட்டை கொலை: கமல்ஹாசன் கண்டனம்!

 

சாதிய வன்மமாக மாறி இரட்டை கொலை: கமல்ஹாசன் கண்டனம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மற்றும் செப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா ஆகியோர் அவரது நண்பர்களுடன் கடந்த 7 ஆம் தேதி இரவு பக்கத்து கிராமமான சித்தம்பாடி பகுதியில் மது அருந்தியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சாதி வெறிக்கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சாதிய வன்மமாக மாறி இரட்டை கொலை: கமல்ஹாசன் கண்டனம்!

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குற்றவாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல், சாதிய வன்மமாக மாறி அரக்கோணத்தில் அர்ஜூனன், சூரியா என இரண்டு இளைஞர்களின் வாழ்வைப் பறித்து விட்டது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொலையாளிகள் தப்பித்துவிட அனுமதிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.