உங்கள் வீட்டிற்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்க வந்தால்… கமல்ஹாசன் ட்வீட்

 

உங்கள் வீட்டிற்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்க வந்தால்… கமல்ஹாசன் ட்வீட்

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார். பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கும் பாஜகவினருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஆரம்பம் முதலே இருந்து வருகின்றன.

உங்கள் வீட்டிற்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்க வந்தால்… கமல்ஹாசன் ட்வீட்

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் அனைத்து வேட்பாளர்களுக்கும் மனம் திறந்த மடல் ஒன்றினை எழுதியிருந்த கமல், கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழவேண்டுமென விரும்புவதாகவும், யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும் , கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை தெற்குத் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வீட்டிற்கு ஓட்டுக்குப் பணமோ அல்லது பரிசுகளோ கொடுக்க யாராவது வந்தால் அவர்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டார்.