“கலவர ஸ்பெஷலிஸ்டுகளை” முறியடிப்போம்! பாஜகவின் அடாவடிகளுக்கு கமல்ஹாசன் கண்டனம்!!

 

“கலவர ஸ்பெஷலிஸ்டுகளை” முறியடிப்போம்! பாஜகவின் அடாவடிகளுக்கு கமல்ஹாசன் கண்டனம்!!

உத்தரப் பிரதேச மாநில முதல்வரும், பாஜக நிர்வாகியுமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்தார். இங்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பரப்புரை செய்தார்.

இதனையடுத்து கோவை நகரத்தின் டவுன் ஹால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் வந்த பாஜக ஆதரவாளர்கள் பலர், கடைகளை மூட சொல்லி அடாவடியில் ஈடுபட்டனர்.

"கலவர ஸ்பெஷலிஸ்டுகளை" முறியடிப்போம்! பாஜகவின் அடாவடிகளுக்கு கமல்ஹாசன் கண்டனம்!!

கடைகளை மூடாதவர்கள் மீது கல்வீசினர். இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து கடை மீது கல்வீசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதித்யநாத் வருகையின் போது பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை. கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக் கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான். “கலவர ஸ்பெஷலிஸ்டுகளை” ஒற்றுமையால் முறியடிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.