ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ரூ.65,000 கடன்! எதற்காகக் கடன் வாங்கினீர்கள்?- கமல்ஹாசன்

 

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ரூ.65,000 கடன்! எதற்காகக் கடன் வாங்கினீர்கள்?- கமல்ஹாசன்

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது என்றும் தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீர வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ரூ.65,000 கடன்! எதற்காகக் கடன் வாங்கினீர்கள்?- கமல்ஹாசன்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 2021-2022-ஆம் ஆண்டு மாநில கடன் சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்க வாய்ப்பிருக்கிறது என தெரிவித்ஹ்டார். இது தமிழக மக்களை தொகை அடிப்படையில், ஒவ்வொருவரின் மீதும் தலா 65 ஆயிரம் ரூபாய் கடன் சுமை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று- தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்பது. இப்போது அரசின் செய்திக் குறிப்பின்படியே, ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது.  எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா? தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீரவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.