‘நாளை நமதே’என நான் முழங்கினால், ‘நிச்சயம் நமதே’ என்கிறார்கள் மக்கள்- கமல்ஹாசன்

 

‘நாளை நமதே’என நான் முழங்கினால், ‘நிச்சயம் நமதே’ என்கிறார்கள் மக்கள்- கமல்ஹாசன்

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மக்கள் நீதி மய்யத்தின் களப்பணி தொடங்கிவிட்டது. ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து தமிழகமெங்கிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். பரப்புரையின் போது ஆளும் கட்சியையும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியையும் தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், #நான் கேட்பேன், #நான் கேட்பேன் என பல்வேறு கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்.

‘நாளை நமதே’என நான் முழங்கினால், ‘நிச்சயம் நமதே’ என்கிறார்கள் மக்கள்- கமல்ஹாசன்

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரச்சார வேனுக்கு சக்கரங்களே தேவையில்லாதபடி மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறேன். மைக் பிடித்திருப்பவர்கள் தான் உறுதிமொழிகள் கொடுப்பார்கள்.ஆனால், செல்லுமிடமெல்லாம் மக்களின் உறுதியான மொழிகளை வாழ்த்தாகப் பெறுகிறேன். நாளை நமதே என நான் முழங்கினால், நிச்சயம் நமதே என்கிறார்கள் மக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.