புத்தம்புது பேருந்துக்குள் மழை! எள்ளி நகையாடிய கமல்ஹாசன்
Nov 16, 2020, 22:43 IST1605546786000
பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அரசுப் பேருந்தின் கூரை சேதமடைந்தது. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்யும் ஆவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தி, “புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?” என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.