எஸ்பிபிக்கு பாரத ரத்னா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கமல் நன்றி!

 

எஸ்பிபிக்கு பாரத ரத்னா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கமல் நன்றி!

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது தர வேண்டுமென பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அர்ஜுன் பேசும்போது, “எஸ்பிபிக்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்” என்று தெரிவித்திருந்தார். பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால், மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்தார். மேலும் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் சற்றுமுன் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது பாரத ரத்னா விருதை மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது தர வேண்டுமென பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ள கமல்ஹாசன்,‘எங்கள் சகோதரர் எஸ்.பி.பி.க்கு நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்’ என தெரிவித்துள்ளார்.