கொரோனா வார்டாக மாற்ற கல்லூரிகளைத் தயார் செய்வோம்- கமல்ஹாசன்

 

கொரோனா வார்டாக மாற்ற கல்லூரிகளைத் தயார் செய்வோம்- கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்று புதிதாக 19,588 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 5,829 பேர் சென்னைவாசிகள், இன்று ஒரே நாளில் 1,45,731 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது. 17,164 பேர் டிஸ்சார்ஜான நிலையில் 147 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,193 ஆக அதிகரித்துள்ளது. 11,86,344 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 10,54,746 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வார்டாக மாற்ற கல்லூரிகளைத் தயார் செய்வோம்- கமல்ஹாசன்

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடந்த ஆண்டு கொரானா வைரஸ் தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டன.தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

படுக்கை வசதிகளை அதிகரிக்க சென்னையில் ஓரிரு கல்லூரிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிகிறேன். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மின்சாரம், குடிநீர் வசதி, கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ள கல்லூரிகள் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வார்டுகளாக மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொரோனா வார்டாக மாற்ற கல்லூரிகளைத் தயார் செய்வோம்- கமல்ஹாசன்

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதற்கேற்றார்போல் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள உயர் ரக தொழில்நுட்பங்கள், சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் நிறைய இருக்கின்றன. அவைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி பொறியியல் மாணவர்களின் திறமையையும், பயன்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு தேவையான அக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்

கொரோனா பரவல் சுனாமி போல தாக்குகிறது என சிறப்பு அதிகாரியே சொல்கிறார். வரும் முன் காக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.