சாமிகள் அரை குறையாக ஆடை அணிந்து இருக்கிறது! கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு

 

சாமிகள் அரை குறையாக ஆடை அணிந்து இருக்கிறது! கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு

சென்னையில் மகளிர் அணியுடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், “நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நடந்து 660 நாட்கள் கடந்துவிட்டது. இன்றளவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. 50 விழுக்காடு பெண்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். காந்தி கண்ட கனவை பெண்களுக்கு நான் வாங்கி கொடுக்க விரும்புகிறேன். தாத்தாவின் ஆசையை பேரன் நிறைவேற்ற வேண்டும். பெண்கள் இரவில் அச்சமின்றி தனியாக நடந்து செல்லவேண்டும் அதுவே காந்தியின் ஆசை.

சாமிகள் அரை குறையாக ஆடை அணிந்து இருக்கிறது! கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு காரணம் பெண்கள் அணியும் ஆடைகள் தான் என கூறுகிறார்கள். சாமிகள் கூட அரை குறையாகதான் ஆடைகள் அணிந்து இருக்கிறது. அந்த சாமியை பார்த்து தோன்றாத காம உணர்வு ஏன் சகோதரிகளான பெண்களை பார்த்து மட்டும் தோன்றுகிறது. பெண்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை” எனக் கூறினார்.