ஈகோவை விட்டுக்கொடுத்து ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் – கமல்ஹாசன்
Dec 15, 2020, 18:30 IST1608037246000
மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து களம் இறங்க தயார் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “அதிமுக கட்சிக்கு நீட்சியாக நான் செல்லவில்லை எம்ஜிஆருக்கு நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்ஜிஆர், அதிமுகவின் திலகம் அல்ல, மக்கள் திலகம். விஸ்வரூப தரிசனம் என்பது சின்னத்திரைக்கு எதிராக யார் தூண்டிவிடுகிறார்கள் யார் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் நம்புகிறோம்.
எனது தென் தமிழக சுற்றுப் பயணத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்? பின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? இதுவே என் கேள்வி. ஒவ்வொரு இடத்திலும் அனுமதி மறுக்கப்படுகிறது. மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து களம் இறங்க தயார்” எனக் கூறினார்.