“நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன்” – கமல்ஹாசன்

 

“நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன்” – கமல்ஹாசன்

நல்ல அரசியலை முன்னெடுக்கவேண்டுமென்றே நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன்” – கமல்ஹாசன்

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பரப்புரை என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

திருவல்லிகேணியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “தமிழகத்தை சீரமைக்க வேண்டும் என்று நம்பி வந்தவர்களை மதிக்கிறேன். நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன். நான் என் பள்ளியில் படித்ததைவிட இந்த வீதிகளில் அதிகம் படித்துள்ளேன்” என பேசினார்.