தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும்; நான் என் தலையை கொடுக்கிறேன் – கமல்ஹாசன்

 

தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும்; நான் என் தலையை கொடுக்கிறேன் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற தலைப்பில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி முகவர்களை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், “வேலூர் சிப்பாய் கழகத்தை பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். சிப்பாய் கழகம் தோற்க் காரணம் தலைவர்கள் தலை கொடுக்காததே. தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும். நான் என் தலையை தமிழகத்திற்கு வைத்துவிட்டேன் நீங்களும் வைத்தால் தான் தமிழகத்தை மீட்க முடியும். நீங்கள் எல்லோருமே தலைவர்கள்.

தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும்; நான் என் தலையை கொடுக்கிறேன் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தில் மகளிர் அணியினர் போஸ்டர் ஒட்டுகின்றனர். அது மற்ற எந்த கட்சியிலும் கிடையாது. வெற்றியை நோக்கி அற்புதமாக நடைபோட்டுக்கொண்டுள்ளோம். அனைத்தும் பிரமாதமாக போய்க்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் வெளியே போக வேண்டாம் என சொன்னார்கள். நான் கூட்டத்திற்குள் போகவில்லை குடும்பத்திற்குள் போகிறேன்.

இல்லத்தரசிகளுக்கான ஊதியம் இன்று ஏளனம் செய்யப்படலாம், ஆனால் நாளை உலகம் நம்மை பாராட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணிணி அரசு செலவில் நிர்ணயிக்கப்படும். அது இலவசம் அல்ல அரசின் சொத்து, முதலீடு. திறன்மேம்பாட்டு மையத்தை பரமகுடியில் தொடங்கிவிட்டோம். விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும். சுற்றுசூழலை பற்றி பேசும் ஒரே கட்சி நாம்தான். பேசுவது மட்டும் அல்ல அதற்கான திட்டத்தையும் வகுத்து வைத்துள்ளோம். நாம் நிழல் அரசாங்கம், வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம் அப்படி வந்தால் நாம் போட்டு வைத்துள்ள திட்டத்தையெல்லாம் செயல்படுத்துவோம்” எனக் கூறினார்.