நாளைய தலைவர்கள் இங்கே தென்படுகிறார்கள் – கமல்ஹாசன்

 

நாளைய தலைவர்கள் இங்கே தென்படுகிறார்கள் – கமல்ஹாசன்

தமது சொந்த ஊரான, பரமக்குடியில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஏழ்மைக்கு எதிரான குரல் என்னுடையது அந்த குரல் உங்களுடன் இணையும். மக்கள் நீதி மய்யத்தின் ஆயுதமான நேர்மையை கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள். மக்கள் நீதி மய்யத்தின் ஆயுதமான நேர்மையை கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள். இங்கேவுள்ள தொழிலாளிகளை முதலாளிகளாக ஆக்குவது தான் என் திட்டம். நாளைய தலைவர்கள் இங்கே தென்படுகிறார்கள்.

நாளைய தலைவர்கள் இங்கே தென்படுகிறார்கள் – கமல்ஹாசன்

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் தயாராகிவிட்டீர்கள். அதனை செய்து காட்டுவோம். மக்களின் ஆட்சி மலர, நீங்கள் மக்கள் நீதி மய்யத்தின் கையை வலுப்படுத்த வேண்டும். நாங்கள் நல்ல திட்டங்களுடன், நேர்மையுடன் உங்களை அணுகுகிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்கக் கூட ஆட்சியாளர்கள் யோசிப்பார்கள். நேர்மை என்பது தான் எங்கள் பலம். அதுவே நமது பலமாக மாற வேண்டும் என்பது தான் எனது ஆசை. உங்கள் வாக்கு என்பது தான் உங்களின் உரிமை. அதனை நீங்கள் கடமை என்று நினைக்க வேண்டும்” என பேசினார்.