இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்- கமல்ஹாசன்

 

இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவை துவக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்- கமல்ஹாசன்

இந்நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேரவையின் கொடி மற்றும் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார்.தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “ மக்கள் நீதி மய்யத்திற்கென்று அடிப்படை தகுதி என்று ஒன்று இருக்கிறது, “அது நேர்மை”. அது இங்கே மிக அவசியம். கண்ணதாசன் வசனம், கலைஞர் வசனம், இளங்கோவன் இவர்களுடைய வரிகளை புரிந்து கொண்ட தமிழகத்தில் என் வசனம் புரியாதா?. நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என கூறினார்.

எவருக்கும் தோல்விகள் ஏற்படும் ஆனால் ஒருவருடைய தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் “லாங் லிவ்” தமிழ்நாடு.

எனது தலைவர் காந்தி தான். ஆனால் எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காந்தி மாதிரியான ஆட்கள் தான் இன்றைய தேவை. இனி இந்தியா இப்படி தான் இருக்கும் என்பவர்களால் மட்டும் தான். ஆசியாவில் முதல் (centrism) நடுநிலையான கட்சி மக்கள் நீதி மய்யம்”
என தெரிவித்தார்.