பாஜக கல்வீசி சென்ற கடைக்கு சென்று செருப்பு வாங்கிய கமல்

 

பாஜக கல்வீசி சென்ற கடைக்கு சென்று செருப்பு வாங்கிய கமல்

உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்ததையொட்டி டவுன்ஹால் பெரிய கடைவீதி பகுதியில் இஸ்லாமியர்களின் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் சமூக வலைத்தளங்களில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

Image

இந்நிலையில் கலவரக்காரர்கள் மிரட்டப்பட்ட வி எம் காலனியகம் என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்ற கமல்ஹாசன் தனது ஆதரவினை தெரிவித்தார். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் வருத்தத்துடன் கடை உரிமையாளர் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய தலைவர் கமல்ஹாசன் இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த கடையில் புதிய செருப்பை வாங்கிய கமல், கடை உரிமையாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசி சென்றார்.