3 ஆண்டுகளாக இடையூறு செய்கிறார்கள்.. கடுப்பில் கமல்ஹாசன்!

 

3 ஆண்டுகளாக இடையூறு செய்கிறார்கள்.. கடுப்பில் கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதில் தற்போது பயங்கர பிஸியாக இருக்கிறார். குறுகிய காலகட்டத்தில் எல்லா மக்களையும் சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர், கடந்த சில நாட்களாக ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார். மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு அவர் ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன.

3 ஆண்டுகளாக இடையூறு செய்கிறார்கள்.. கடுப்பில் கமல்ஹாசன்!

இந்த நிலையில் இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், என்னை ஹெலிகாப்ரில் செல்ல வைத்தது மக்கள் தான். அரசு பணத்தில் நான் செல்லவில்லை. எனது சொந்த பணத்தில் தான் சென்றேன். என்னை பல இடங்களில் தடங்கல் செய்ய ஆரம்பித்து 2 – 3 வருடங்கள் ஆகிவிட்டது. நான் மாணவர்களுடன் பேசக் கூடாது என்பதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று கூறினார்.

3 ஆண்டுகளாக இடையூறு செய்கிறார்கள்.. கடுப்பில் கமல்ஹாசன்!

தொடர்ந்து பேசிய அவர், குறுகிய காலகட்டத்தில் நான் சென்றடைய வேண்டிய இடத்துக்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறேன். எனது வேட்பாளர்களுக்கு தோள் கொடுக்க எல்லா இடங்களுக்கும் செல்கிறேன். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்தை பிற அரசியல் கட்சிகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.