தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு!

 

தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. அக்கட்சியில் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, ஒருமித்த கருத்துக்களுடைய கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு!

இந்த நிலையில், கூட்டணி என்பது என் வேலை. வெற்றிக்கு எல்லாரும் உழைக்கவேண்டும். நம் கூட்டணி மக்களுடன் தான் என மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடலில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், கமல் இவ்வாறு அறிவித்திருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.