“அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” – கமல்ஹாசன் ட்வீட்!

 

“அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” – கமல்ஹாசன் ட்வீட்!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஒரு பக்கம் சினிமா, ஒரு பக்கம் அரசியல் என அதிரடியாக களமிறங்கியிருக்கும் கமல்ஹாசன், நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் அவர் தனது 66ஆவது பிறந்தநாளை கடந்த சனிக்கிழமை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

“அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” – கமல்ஹாசன் ட்வீட்!

இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” – கமல்ஹாசன் ட்வீட்!

என் பிறந்த நாளை ‘நற்பணி’ தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள ‘உள்ளும் புறமும்’ சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்” – கமல்ஹாசன் ட்வீட்!