‘பிள்ளைகளுக்கு மன வலிமையை தர வேண்டியது நம் கடமை’ : கமல்ஹாசன் பதிவு!

 

‘பிள்ளைகளுக்கு மன வலிமையை தர வேண்டியது நம் கடமை’ : கமல்ஹாசன் பதிவு!

நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டது குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் என பலரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாளை நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார்.

‘பிள்ளைகளுக்கு மன வலிமையை தர வேண்டியது நம் கடமை’ : கமல்ஹாசன் பதிவு!

இவ்வாறு நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்களின் மரணம் தொடர்கதையாகி வருவதால், நீட் தேர்வுக்கு எதிராக பலரும் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் மாணவி துர்கா மரணம் குறித்து மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘பிள்ளைகளுக்கு மன வலிமையை தர வேண்டியது நம் கடமை’ : கமல்ஹாசன் பதிவு!

அந்த பதிவில் “மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!” என குறிப்பிட்டுள்ளார்.