“தமிழர்களை சகோதரர்கள் என்று அழைத்தார்” – பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சரும் சிபிஐ(எம்) தலைவருமான பினராயி விஜயன் தனது 76 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் மெட்ராஸ் பிரசிடென்சியின் மலபார் மாவட்டமான பினாராயில் 1944-ஆம் ஆண்டு மே 24 அன்று பிறந்த விஜயன் ஒரு விரிவான அரசியல் வாழ்க்கையை வழிநடத்தியுள்ளார். மேலும் 1998 முதல் சிபிஐ(எம்) கேரள மாநிலக் குழுவின் நீண்டகால செயலாளராக இருந்தார்.
Then, he created a storm by talking with a bloodstained shirt. Now, he has made his state the object of adulation in the country. The CM of Kerala emphasised our bond, calling us brothers, keeping the borders open. Our Heartfelt birthday wishes to our comrade @vijayanpinarayi
— Kamal Haasan (@ikamalhaasan) May 24, 2020
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறுகையில், “பினராயி விஜயன் இரத்தக் கறை படிந்த சட்டையுடன் பேசுவதன் மூலம் அரசியலில் புயலை உருவாக்கினார். இப்போது, அவர் நாட்டிலேயே தனது மாநிலத்தை புகழ்பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளார். கேரள முதல்வர் தமிழகத்துடனான பிணைப்பை வலியுறுத்தினார். தமிழர்களை சகோதரர்கள் என்று அழைத்தார். கேரளாவில் எல்லைகளை தமிழகத்திற்காக திறந்து வைத்திருந்தார். நமது தோழர் பினாராயி விஜயனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றார்.