100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் என்.சங்கரய்யாவுக்கு கமல் வாழ்த்து!

 

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் என்.சங்கரய்யாவுக்கு கமல் வாழ்த்து!

சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா நாளை தனது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சங்கரய்யாவின் 100வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று ‘மக்கள் பணியில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் குறுந்தகடை வெளியிட்டது. அதில் அவரது விடுதலைப் போராட்டம் மற்றும் சிறை அனுபவங்கள் உள்ளிட்ட வாழ்க்கை வரலாறுகள் இடம்பெற்றுள்ளன.

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் என்.சங்கரய்யாவுக்கு கமல் வாழ்த்து!

என். சங்கரய்யாவின் பிறந்தநாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை நேரில் வந்து சங்கரய்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கவுள்ளார். அதே போல, முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் அவரை நாளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

இந்த நிலையில், 100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ’வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும் என்று குறிப்பிட்டுள்ளார்.