“கலைஞரின் சக்கர நாற்காலியை தள்ளியவர்களில் நானும் ஒருவன்” – சீமான் மீட்டரை கச்சிதமாக பிடித்த கமல்!

 

“கலைஞரின் சக்கர நாற்காலியை தள்ளியவர்களில் நானும் ஒருவன்” – சீமான் மீட்டரை கச்சிதமாக பிடித்த கமல்!

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா சென்னையில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “மக்களுக்கு சேவை செய்யும் அந்த ஆக்டிவ் லைஃப்ங்கிறது எனக்கு வேணும். அதனால் ஐந்து வருடத்தில் நடக்கக்கூடிய வேலையைச் சொல்றேன். ஐந்து வருடம்தான். அதுக்கப்புறம் ஒரு பத்து வருடம் வேலை செய்யனும். அதுக்கப்புறம் சக்கர நாற்காலியில் எல்லாம் இருந்துக்கிட்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று பேசினார். இதற்கு அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் ஆர்ப்பரித்து கைதட்டினர்.

“கலைஞரின் சக்கர நாற்காலியை தள்ளியவர்களில் நானும் ஒருவன்” – சீமான் மீட்டரை கச்சிதமாக பிடித்த கமல்!

கமல்ஹாசன் கலைஞர் கருணாநிதியைத் தான் கூறுகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அரசியலில் எம்ஜிஆரின் வாரிசு என நொடிக்கொரு முறை கூறிக்கொள்ளும் அவர் மறந்தும் கூட கருணாநிதியின் பெயரை உச்சரிப்பதில்லை. கமலின் இப்பேச்சு திமுக தொண்டர்களிடமும் அனுதாபிகளிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூடவே மாற்றுத்திறனாளிகளும் கொந்தளித்தனர்.

இதையடுத்து ‘மன்னிப்பு கேள் கமல்’ என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இதுதொடர்பாக விளக்களித்துள்ள கமல்ஹாசன், “சக்கர நாற்காலி விவகாரத்தில் கலைஞரைக் கிண்டல் செய்ததாகக் கூறுபவர்கள் அறிவிலும் அனுபவத்திலும் வயதிலும் சிறியவராக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். கலைஞர் மீது எனக்கு இருக்கும் மரியாதை அவருக்குத் தெரியும். (கீழே உள்ள வீடியோவில் 9.30-10.40 நிமிடம் வரையிலான பேச்சை கேட்கவும்)

அவர் உயிரோடு இருந்திருந்தால் நான் கூறியதின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பார். சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தபோது அதைத் தள்ளிவந்த கூட்டங்களில் நானும் ஒருவன். ஆகவே அவரின் வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசுவதற்கு வாய்ப்பே கிடையாது. என்னுடைய முதுமை பற்றியும் நான் என்ன செய்வேன், செய்ய மாட்டேன் என்பது குறித்தும் தான் பேசினேன். சக்கர நாற்காலி ஏற்படுவது ஒரு அவலநிலை. அப்படியொரு அவலநிலை வந்தாலும் நான் என்ன செய்வேன் என்பதேயே சொன்னேன்”